அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்
X
கலெக்டர் பிருந்தா தேவி தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க இத்திட்டத்தில் ஓராண்டு காலம் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் மலையிட பகுதியில் அமையும் பட்சத்தில் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story