கொண்டலாம்பட்டி மேம்பாலம் பகுதியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கொண்டலாம்பட்டி மேம்பாலம் பகுதியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி பகுதியில் பட்டர் பிளை மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இடது புறத்தில் உள்ள ஒரு மரத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். ஆனால் இறந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் 4 நாட்களுக்கு முன்பு அவர் தூக்குப்போட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story