ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்

ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்
X
மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களில் திருக்​குறளை தவறாக அச்​சிடப்​பட்​ட​தால் அவற்றை திரும்​பப்​பெற்​று, திருத்​தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்​.என்​.ரவி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.
சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்​து​வர் தின விழா நடந்​தது. சிறப்​பாக சேவையாற்றிய 50 மருத்​து​வர்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட​யங்​களை வழங்கி கவுர​வித்​தார். அந்த கேட​யங்​களில் திருக்​குறள் அச்​சிடப்​பட்​டிருந்​தது. அது​தான் தற்​போது பெரும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது. கேட​யத்​தில் இடம் பெற்​றிருப்​பது திருக்​குறளே இல்லை என்று தமிழ் ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் சர்ச்​சைக்​குள்​ளான நிலை​யில், 50 மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களை திரும்ப பெற்​று, திருக்​குறளை திருத்​தம் செய்து சில தினங்​களில் மீண்​டும் வழங்​கு​மாறு ஆளுநர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.
Next Story