தக்கோலம்: மோட்டார்சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி

X
அரக்கோணம் அடுத்த திருமாதலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60), சமோசா வியாபாரி. இவர் நேற்று மாலை வியாபாரம் செய்வதற்காக தக்கோலத்தில் அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற தனியார் தொழிற்சாலை மினி பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

