போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணியில் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன், என கோசமிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளி சார்பில் 22-7-2025 இன்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் தலைமையில் மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணியில் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன், என கோசமிட்டனர். பின்பு நடை பெற்ற பேரணியில் போதையை ஒழிப்போம், போதை அழிவின் பாதை, புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், வேண்டாம் வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம். ஒழிப்போம் ஒழிப்போம் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்று கோசமிட்டுச் சென்றனர். பேரணி இலாடபுரம் மாரியம்மன் கோயில் வழியாக பல்வேறு தெருக்களில் சென்று ஊராட்சி மன்ற அலுவலகம் பேருந்து நிலையம் இந்தியன் வங்கி அரசு ஆதிந மாணவியர் விடுதி அரசுப் பள்ளி அம்பேத்கார் சிலை வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தனர். பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் சிலம்பரசி அருணா கார்த்திகா, மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு சாவித்திரி பெருமாள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story