பொன்னமராவதி: நடந்து சென்றவர் மீது பேருந்து மோதி விபத்து

X
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60). இவர் பொன்னமராவதி புதிய பேருந்து நிலையம் அருகே, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தனியார் பேருந்தை ஓட்டி வந்த சரவணப்பாண்டி மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

