கால்வாயில் மூழ்கி சென்னை ஐ.டி., ஊழியர் பலி

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ்(33) ஐ.டி. ஊழியர் விராலிப்பட்டி கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழாவிற்கு நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். இந்நிலையில் அருகில் உள்ள வைகை பெரியாறு சிமென்ட் பாசன கால்வாயில் அனைவரும் குளிக்க சென்றபோது, சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருவேங்கடம்(34) கால்வாய் படியில் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். இதில், அவர் அடித்து செல்லப்பட்டார். 10 கி.மீ., கடந்து இவரது உடல் கரை ஒதுங்கியது. நிலக்கோட்டை தீயணைப்புதுறையினர் உடலை மீட்டனர் வத்தலக்குண்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

