சோழவித்யாபுரத்தில் புனித சந்தன மாதா ஆலய ஆண்டுத் திருவிழா

மின் அலங்கார பெரிய தேர் பவனி
நாகை மாவட்டம் சோழவித்யாபுரத்தில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் தாயான, புனித சந்தன மாதா  ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில், ஆண்டு திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி‌ நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதனையொட்டி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் மிக்கேல், சம்மனசு, அந்தோணியார், சூசையப்பர், சுவக்கின், சந்தனமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் நவநாள் ஜெபம் உள்ளிட்ட சிறப்புத் .திருப்பலி நடைபெற்றது. பின்னர், புனிதம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பெரிய தேர் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி கண்கவர் வானவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, புதிதாக கட்டப்பட்ட தூய அன்னாள் கலையரங்கத்தை, தஞ்சை மறை மாவட்ட ஆயர் திறந்து வைத்தார்.
Next Story