ஆத்தூர் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் விபத்து. இருவர் படுகாயம்.

ஆத்தூர் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் விபத்து. இருவர் படுகாயம்.
ஆத்தூர் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் விபத்து. இருவர் படுகாயம். சேலம் மாவட்டம் , தேக்கம்பட்டியை சேர்ந்தவர் குழந்தைசாமி மகன் இளவரசன் வயது 21. அதே பகுதியைச் சேர்ந்த தென்னன் மகன் தேவேந்திரன் வயது 23. இருவரும் ஜூலை 27 இரவு 7:30 மணியளவில் கரூர் காவல் எல்லைக்குட்பட்ட ஆத்தூர்-கோதூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரை தேவேந்திரன் ஓட்டிச் சென்றார். இவர்கள் ஆத்தூர் ராசப்பன் செட்டியார் தோட்டம் அருகே சென்ற போது , டூவீலரில் வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அறிந்த இளவரசனின் சகோதரர் கோவிந்தராஜ் வயது 24 அளித்த புகாரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கரூர் காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தேவேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story