போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்

போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்
X
மூதாட்டி உயிரிழப்பு சம்பவம்
குமரியில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் மூதாட்டி சூசை மரியாள் குடும்பத்திற்குநீதி கிடைப்பதற்கு போராட் டம் நடத்துவதற்காக மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள்தாஸ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுபடி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள் வது என்றும், அதுவரை சூசைமரியாள் உடலை பெறக்கூடாது எனவும், மேலும் இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்  ஆஸ்கர் பிரடி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அஸ்வின், திமுக மாவட்ட பிரதிநிதி ஜேக்கப் ததேயூஸ், அதிமுக மத்திகோடு ஊராட்சி கிளை செயலாளர் மிக்கேல்ராஜ், சுஜித் ஆரோக்கிய ராஜ் உட்பட அனைத்து கட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.
Next Story