ஒகேனக்கல்லில் குவிந்த பயணிகள் கூட்டம்
பென்னாகரம் தொகுதி கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரியாற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதுமாக காணப்படுகிறது இன்று ஆகஸ்ட் 03 காலை நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பணிகள் காலை முதல் குவிந்தனர்
Next Story




