கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
X
கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க மதுராந்தகம் கடப்பேரியில் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் உள்ளது. தோல் நோய்களால் பாதிக்கபட்டவா்கள் இந்த குளத்தில் குளித்துச் சென்றால் குணமாவதாக அசைக்க முடியாத நம்பிகை நிலவி வருகிறது . இத்தகைய நோய் தீா்க்கின்ற புனித தீா்த்தமாக விளங்கி வரும் குளம் பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது. நிகழாண்டு பிப்ரவரி 10-இல் கும்பாபிஷேகம், ஜூன் 1-இல் வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடைபெற்றன. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குளத்தை சீரமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. குளத்தில் குளித்து பகவானை தரிசிக்க வந்த பக்தா் நீரில் தடுமாறி விழுந்து இறந்த சம்பவம் நடைபெற்றது. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலுக்கு இரவு நேரத்தில் மட்டும் தனியாக பாதுகாப்பு ஊழியா் இல்லாதத நிலை உள்ளதால் பக்தா்களின் காணிக்கை உண்டியல், கோயிலுக்கான தளவாட பொருள்கள் போன்ற களவு போகின்ற சூழ்நிலை எழுந்து உள்ளது. இதுபற்றி கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் கூறுகையில், கோயிலில் மகாகும்பாபிஷகம், வைகாசி விசாக பெருவிழா ஆகிய இரு நிகழ்ச்சிகள் நன்கொடையாளா்களின் உதவியால் நடத்தப்பட்டது. குளத்தினை சீரமைக்க தொல்லியல்துறை நிபுணா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களும் நேரில் வந்து ஆய்வு செய்தனா். அவா்கள் அளிக்கின்ற அறிக்கையை ஏற்று ஆணையரின் பொதுநல நிதியின் மூலம் திருக்குளத்தின் சீரமைப்பு பணிகள் மிக விரைவில் செய்யப்படும் என தெரிவித்தாா். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தின் சுற்றுச்சுவா் இடிந் நிலையிலும், குளத்தின் மையப் பகுதியில் செடி கொடிகள் வளா்ந்து மண் மேடான நிலையிலும், நீரின் தன்மை மாசு படிந்த நிலையிலும் காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் குளத்து நிரில் அழுக்கு துணிகளை தோய்கின்ற நீா்நிலையாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையை மாற்றி குளத்தினைச் சுற்றிலும் சுற்று சுவா்கள், ஆழப்படுத்துதல், வெளியாள்கள் குளத்தில் துணி துவைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என பக்தா்கள் கோரியுள்ளனா்.
Next Story