க.பரமத்தி- லாரியை திடீரென இடது புறம் திருப்பியதால் கார் மோதி விபத்து.
க.பரமத்தி- லாரியை திடீரென இடது புறம் திருப்பியதால் கார் மோதி விபத்து. திருப்பூர் மாவட்டம் பாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது 37.அதே பகுதியைச் சேர்ந்த வீரா வயது 40. அதே பகுதியை சேர்ந்த பால்பாண்டி என்பவர் திருப்பூர் - கரூர் சாலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ஓட்டி வந்த காரில் பிரகாஷ் மற்றும் வீரா ஆகியோர் பயணித்தனர். இந்த கார் கரூர் மாவட்டம் க.பரமத்தி காமராஜர் நகர் அருகே வந்தபோது, இவர்களுக்கு முன்பாக கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் தாலுக்கா , மேலவிட்டுக்கட்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் வயது 55 என்பவர் ஓட்டி சென்ற லாரி , திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் இடது புறம் திரும்பியதால் பால்பாண்டி ஓட்டி வந்த கார் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த பிரகாஷ் மற்றும் வீரா ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் இருவரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சம்பவம் தொடர்பாக பிரகாஷ் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சாலை விதிகளுக்கு புறம்பாக லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அய்யனார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story





