சங்கரன்கோவில் அருகே ஒண்டிவீரன் நினைவு தூனிற்கு அமைச்சர் மரியாதை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 254-வது நினைவு நாளினை இன்று முன்னிட்டு அன்னாரது நினைவு தூணிற்கு திமுக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

