ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரியாற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதுமாக காணப்படுகிறது. இன்று ஆகஸ்ட் 21, காலை 10.30 மணி நிலவரப்படி வினாடிக்கு 32,000 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் சவாரி செய்ய மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
Next Story




