துலுக்கன்பட்டி குளத்தில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

X
விராலிமலை அருகே துலுக்கம்பட்டியில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக விராலிமலை வருவாய் துறைக்கு இன்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் துரைராஜ் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது மாட்டு வண்டியில் மணல் அள்ளியது தெரியவந்தது. பின்னர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் மணி என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

