விராலிமலை அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

விராலிமலை அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
X
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த துளுக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி (33). இவர் துளுக்கம்பட்டி குளத்தினருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1/4 யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story