குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

X
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீர் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் நீராடுவதற்காக இன்று திரண்டு வந்த வண்ணம் இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

