வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சூடும் போட்டி துவக்கம்

X
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. அவர்கள் தலைமையில், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று (15.09.2025) தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் ஆரம்பமானது. இப்போட்டி இரண்டு நாட்கள் (15.09.2025 மற்றும் 16.09.2025) நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி நகரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 9வது, 11வது, மற்றும் 12வது பட்டாலியன் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் அவர்கள் துவக்கி வைத்து, தாமும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, மேற்படி மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 22 காவல்துறை உயர் அதிகாரிகள் போட்டியில் பங்கேற்றனர்.
Next Story

