மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.19.81 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 462 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,380/- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.5,67,500/- மதிப்பீட்டில் வட்டியில்லா மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒரு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவியினையும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.19,80,880 /- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ச.பிரபாகரன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story