வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸால் நடுங்கிய பெண்

வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸால் நடுங்கிய பெண்
X
12 கோடியே 86 லட்சம் வருமான வரி பாக்கி உள்ளதாக பெண் ஒருவருக்கு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
துாத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினம் பாக்யாநகர் பகுதியை சேர்ந்த ஜெயபாலன் மனைவி கிளமென்ஸி, 47, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது எனது கணவர் ஜெயபாலன் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். அவர் மாதம்தோறும் கொடுக்கும் பணத்தை வைத்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறேன். கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதியாண்டுகளில் ஏற்றுமதி தொழில் செய்த வகையில் 12 கோடியே 86 லட்சத்து 4643 ரூபாய் வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும் என துாத்துக்குடியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. மேலும், எனது பெயரில் உள்ள இரண்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் கேட்டால் அதிகாரிகள் உரிய பதில் கூற மறுக்கிறார்கள். எனது பான் கார்டை யாரிடமாவது கொடுத்தீர்களா? என என்னிடமே திருப்பி கேள்வி கேட்கின்றனர். இதேபோல 39 பேருக்கு தவறுதலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எந்த தொழிலும் செய்யாமல் ஏழ்மையில் இருந்து வரும் எனக்கு 12 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி என நோட்டீஸ் அனுப்பி இருப்பது வேடிக்கையாக உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும். மேலும், முடக்கம் செய்யப்பட்டுள்ள எனது இரண்டு வங்கி கணக்குகளையும் விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்
Next Story