ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு!

X
குரும்பூர் ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆண் நபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் ஒரு வாலிபர் பிணமாக கிடைப்பதாக நெல்லை நெல்லை இருப்பு பாதை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இறந்து கிடந்தவருக்கு சுமார் 48 வயதிருக்கும். இடது கை முழுமையாக இல்லை. அவர் தாம்பரத்திலிருந்து திருச்செந்தூர் வரை ரயில்வே டிக்கெட் எடுத்துள்ளார். அவர் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து நெல்லை இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

