ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சி அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு, சமீப நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து 8,000 கன அடியாக இருந்து நீர்வரத்து இன்று வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் வினாடிக்கு 6,500 கனஅடியாக சரிந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story




