தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வு நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |28 Sept 2025 6:09 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி- II மற்றும் தொகுதி IIA பணிகள்) பதவிகளுக்கான போட்டித்தேர்வு நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி, பி.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி- II மற்றும் தொகுதி IIA பணிகள்) பதவிகளுக்கான போட்டித்தேர்வு நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, தேர்வு மையங்களில் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி- II மற்றும் தொகுதி IIA பணிகள்) பதவிகளுக்கான போட்டித்தேர்வுகள் நாமக்கல், இராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு வட்டங்களில் ஆகிய பகுதிகளில் 55 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 16,109 தேர்வர்கள் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் காலை 6 மணி முதல் செல்வதற்கு ஏதுவாக அனைத்து தேர்வு கூடங்களுக்கும் பேருந்து வசதி மற்றும் தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தேர்விற்கு துணை ஆட்சியர் நிலையில் 6 பறக்கும் படை அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலர்கள் உட்பட நியமிக்கப்பட்டனர். தேர்வர்கள் போட்டி தேர்வினை எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி- II மற்றும் தொகுதி IIA பணிகள்) போட்டித்தேர்வினை 12,727 (79.01 சதவீதம்) தேர்வர்கள் எழுதி உள்ளார்கள். 3,382 (20.99 சதவீதம்) தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.
Next Story


