நாமக்கல்லில் வருகிற வெள்ளிக்கிழமை தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!- கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தகவல்.

நாமக்கல்லில் வருகிற வெள்ளிக்கிழமை தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!- கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தகவல்.
X
திமுக பொறியாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 03 ) காலை 10.00 மணிக்கு நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைப்பெறும்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள் இதன் அறிமுக கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றுகிறது, இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 03 ) காலை 10.00 மணிக்கு நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.இக்கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பொறியாளர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story