கோவை: சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் விழா
கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் விஜயதசமி முன்னிட்டு நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அரிசியில் அ, பிள்ளையார் சுழி, அம்மா, அப்பா போன்ற எழுத்துகளை எழுத வைத்தனர்.இந்த நிகழ்ச்சிக்காக 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்பதிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றன.
Next Story



