வால்பாறை அருகே கரடி பீதி!

X
கோவை, வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு நேற்று இரவு ஒரு கரடி புகுந்தது. உணவுதேடி அங்கு சுற்றித் திரிந்த கரடியை பார்த்த குடியிருப்புவாசிகள் பயந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கரடியை காட்டுக்குள் விரட்டியனர். சமீபகாலமாக மலைப்பகுதிகளில் கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைவது காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் கரடி மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

