பைபர் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது

X
நாகை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீரையன் (52). மீனவர். இவர் பைபர் படகில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென்று மயங்கி படகில் இருந்து கடலில் விழுந்தார். உடனே மீனவர்கள் கடலில் குதித்து வீரையனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, நாகை கடலோர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story

