காரப்பிடாகை அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

காரப்பிடாகை அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
X
இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ்க் கூடல், ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் தலைமையாசிரியர் கை.கயிலைராஜன் (பொ) தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பா.அம்பிகா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேதாச்சலம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கலைத்திறன் பயிற்றுநரும், நாட்டுப்புறப் பாடகருமான தென்னடார் அம்பிகாபதி கலந்து கொண்டு, "தமிழ் மொழியும் வாய்மொழி இலக்கியமும்" என்ற தலைப்பில் பேசினார். தமிழ்க் கூடல் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட இலக்கியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, தமிழாசிரியர் சு.மஞ்சுளா வரவேற்றார். முடிவில், பட்டதாரி ஆசிரியர் ம.சரவணன் நன்றி கூறினார்.
Next Story