நாமக்கல்லில் லாரி ஓட்டுநர்களுக்கு மத்திய அரசு சார்பில் பயிற்சி மையம் அமைக்க கோரி மத்திய அமைச்சருடன் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கோரிக்கை மனு !

X
Namakkal King 24x7 |14 Oct 2025 6:31 PM ISTமத்திய அரசு லாரி ஓட்டுநர் தொழிலாளர்களுக்கு தனியாக இன்றைய காலக்கட்டத்திற்கு இணங்க புதிய நவீன முறை பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
மத்திய தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களை மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்பி , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்பி ஆகியோர் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.... நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி, ரிக், டிரெய்லர், கனரக, இலகுரக, சமையல் எரிவாயு மற்றும் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தற்பொழுது ஓட்டுநர்கள் குறைந்து வருவதால் லாரி தொழிலின் சரிவிற்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது. ஆகையால், மத்திய அரசு லாரி ஓட்டுநர் தொழிலாளர்களுக்கு தனியாக இன்றைய காலக்கட்டத்திற்கு இணங்க புதிய நவீன முறை பயிற்சிகளை அளித்து மேலும் இன்றைய லாரி ஓட்டுநர் தொழிலாளர்களுக்கு (கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு) இறப்பு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தி லாரி தொழிலை சரிவிலிருந்து மீட்டு லாரி உரிமையாளகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story
