கோவை: கஞ்சா விற்பனை – மேற்கு வங்க நபர் மீது குண்டர் சட்டம் !

X
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை பேரூர் அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். பொது ஒழுங்கு மற்றும் சுகாதாரத்திற்கு பாதகமான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அவர்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story

