மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட
X
வாகனங்கள் நாளை பொது ஏலம்
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 104 மோட்டார் சைக்கிள்கள் நாளை (வியாழன்) பொது ஏலத்தில் விட்டு அரசுக்கு ஆதாயம் தேட ஏதுவாக பழைய ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாளை (16-ம் தேதி) காலை 10 மணி முதல் வாகனங்கள் ஏலத்தில் விடப்படும். வாகனங்களை ஏலத்தில் எடுக்க விரும்புபவர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் நேரில் வந்து, தங்களுடைய பெயர், முகவரியை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் நாகை பழைய ஆயுதப்படை வளாத்தில், வாகனம் ஏலம் விடும் குழுவிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொது ஏலத்தில் அதிக விலை கேட்பவர்களுக்கு வாகனம் வழங்கப்படும். மேலும், ஏலம் எடுத்த வாகனங்களுக்கான தொகையை உடனுக்குடன் செலுத்தி வாகனங்களை பெற்று கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04365 247 430 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story