கோவில்பட்டியில் தீப்பெட்டி குடோனில் தீ விபத்து!

கோவில்பட்டியில் தீப்பெட்டி குடோனில் தீ விபத்து!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லாக்கு சாலை முதல் தெரு பகுதியில் முத்துக்குமார் என்பவர் தீப்பெட்டி ஆளை நடத்தி வருகிறார். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் அப்பகுதியில் சிலர் பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்போது பட்டாசு வெடிக்கும் போது வெடித்து சிதறிய போது தீப்பெட்டி ஆலையின் பின்புறம் உள்ள குடோன் பகுதியில் விழுந்துள்ளது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்து குச்சியில் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. குடோன் முழுவதும் பரவி எரிய தொடங்கியதால் வானளவிற்கு கரும்புகள் எழுந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகள் ஈடுபட்டனர். குடோனுக்குள் தீ பற்றி இருந்ததால் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்தது இதனை தொடர்ந்து குடோனின் மேல்பகுதி மற்றும் பின்புறம் பகுதிகளை உடைத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி மூலப்பொருட்கள் தீ மருந்து குச்சிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புக்கள் நெருக்கடியான பகுதியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி ஆலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் எழுந்த புகையினால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
Next Story