அம்பாள் நகரில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த வட மாநில கட்டுமான தொழிலாளி.

அம்பாள் நகரில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த வட மாநில கட்டுமான தொழிலாளி.
அம்பாள் நகரில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த வட மாநில கட்டுமான தொழிலாளி. ஜார்க்கண்ட் மாநிலம் இஸ்லாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் அன்சாரி வயது 36. இவர் மற்றும் இவரது உறவினர்கள்நான்கு பேர் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் முதல் தெருவில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் சதாம் அன்சாரிக்கு திடீரென மார்பு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அறிந்த அவரது உறவினர் மன்சூர் அன்சாரி அளித்த புகாரில் கரூர் மாநகர காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story