பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் வெண்ணந்தூர் வட்டம், தொட்டியவலசு பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டுப்புழு வளர்ப்பு தொகுப்பினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, தொட்டியவலசு கிராம ஊராட்சி சேவை மையத்தில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் பராமரிக்கும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.அதனைத் தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், மோளகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, வெண்ணந்தூர் பேரூராட்சியில் ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு நிதியின் கீழ் நாடார் தெரு மெயின் சாலை முதல் குடிநீர் தொட்டி வரை சாலை அமைக்கும் பணியினையும், வெண்ணந்தூர் காவல் நிலையம் அருகில் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், வெண்ணந்தூர் பேரூராட்சியில் அறிவுசார் மையம் மற்றும் நாகர்பாளி தெருவில் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் ஆகியவை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story