நீர்தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.

X
NAMAKKAL KING 24X7 B |8 Nov 2025 6:18 PM ISTநாமக்கல் சட்டமன்றம் மோகனூர் ஒன்றியம், அணியாபுரம், NPS நகரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் பச்சைத்துண்டு பழனிமலை, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்டம் நாமக்கல் சட்டமன்ற மகளிரணி செயலாளர் பிரேமலதா, மோகனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, சுரேஷ், சண்முகம், ஒருங்கிணைந்த மோகனூர் மகளிரணி செயலாளர் சுதா, தமிழ்செல்வி, வனிதா உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
