விதி மீறி செயல்பட்ட மூன்று சாயப்பட்டறை மின் இணைப்பு துண்டிப்பு

X
Komarapalayam King 24x7 |12 Nov 2025 6:36 PM ISTகுமாரபாளையத்தில் விதி மீறி செயல்பட்ட மூன்று சாயப்பட்டறைகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் ஒரு சாயப்பட்டறைக்கு சீல் வைக்கப்பட்டது.
குமாரபாளையம் பகுதிகளில் பிரதான தொழிலாக ஏராளமான சாய ஆலை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தாலும், சட்ட விரோதமாக சுத்திகரிப்பு செய்யாமல் சாயநீரை நேரடியாக கால்வாய் மூலம் ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு வருகின்றனர். குமாரபாளையம் பகுதியில் இரண்டு டையிங் நிறுவனங்கள் சட்ட விரோதமாக இரவு நேரங்களில் சாய தண்ணீரை சுத்திகரிக்க செய்யாமல் நேரடியாக கால்வாய் மூலம் காவேரி ஆற்றில் கலப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். புகாரின்படி, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் செல்வகணபதி தலைமையிலான அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் ஆய்வு செய்த பொழுது, இந்த இரண்டு நிறுவனங்களும் சட்டவிரோதமாக கலர், கலராக சாய தண்ணீரை வெளியேற்றி வருவது தெரியவந்தது. குமாரபாளையம் ராஜம் தியேட்டர் எதிரில் மற்றும் குளத்துக்காடு பகுதியில் ஆகிய இரு சாயப்பட்டறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதேபோல் சமய சங்கிலி கிராமத்தில் சாயப்பட்டறையை இயக்கி சுத்திகரிக்கப்படாத சாயநீரை காவிரி ஆற்றில் ரகசிய குழாயின் மூலம் சாய தண்ணீரை வெளியேற்றி வந்துள்ளனர். பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த நிறுவனத்திற்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சீல் வைத்தனர்.
Next Story
