திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு திமுக மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள்!!
முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணியின் சார்பில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர் ஊராட்சியில் 570 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையிலும், திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் வெ. வேட்டையன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில், நல்லூர் ஊராட்சியில் 570 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1,35,000 குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவகாசி த. வனராஜா, திருமங்கலம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டி, திமுக கிளை செயலாளர்கள் மகாலிங்கம், சரவணன், திமுக மாவட்ட நிர்வாகிகள், திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


