நீர் நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு அகற்றம்

நீர்வழிப் பாதையின் மேல் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சிமெண்ட் கான்கீரிட் தளம் (Reinforced Cement Concrete Slab) தொடர்பான வழக்கில் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியி
பெரம்பலூர் நகரத்தின் முக்கிய சாலையான துறையூர்-பெரம்பலூர் சாலையில் பாலக்கரை பாலத்தின் வடபுறம் நீர்வழிப் பாதையின் மேல் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சிமெண்ட் கான்கீரிட் தளம் (Reinforced Cement Concrete Slab) தொடர்பான வழக்கில் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை இன்று(18.12.2025) நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். நீர்வழிப்பகுதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையால், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்லைவர் ந.மிருணாளினி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர்கள் ராஜா, விக்னேஷ், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story