ராசிபுரத்தில் கிறிஸ்மஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..

X
Rasipuram King 24x7 |25 Dec 2025 7:23 PM ISTராசிபுரத்தில் கிறிஸ்மஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புனித லூதர் அன்னை ஆலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பான கிறிஸ்மஸ் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து தொடர்ந்து தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் விதமாக குடில்கள் அமைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அனைவரும் பார்வையிட்டு ரசித்து மேலும் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நள்ளிரவில் தேவாலய அருட் தந்தை ஜான் ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்..
Next Story
