தலைமை அஞ்சல் அலுவலகம் புதிய இடத்தில் பணிகள் துவக்கம்

X
Komarapalayam King 24x7 |26 Dec 2025 10:20 PM ISTகுமாரபாளையம் தலைமை அஞ்சல் அலுவலகம் புதிய இடத்தில் நேற்று முதல் பணிகள் துவங்கியது.
குமாரபாளையம் காந்திநகர் இரண்டாவது வீதி, பள்ளிபாளையம் ரோட்டில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வந்தது. . இது குமாரபாளையம் பொதுமக்களுக்கு மிகவும் தொலைவு என்பதால், ஊருக்குள் தலைமை அஞ்சல் ,நிலையத்தை அமைக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுநல அமைப்பினர் பலரும் கோரிக்கை விடுத்தனர். பல இடங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கட்டிடம் தேர்வானது. இங்கு நேற்று காலை முதல் பணிகள் துவங்கியது. குமாரபாளையம் அஞ்சல் நிலைய தலைமை அலுவலர் சாந்தி உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தனர். மாடியில் அலுவலகம் என்பதால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் இந்த அலுவலகம் வர இயலாத நிலை ஏற்படும். எனவே கீழ் தளத்தில் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு உதவும் வகையில், கவுண்டர்கள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
