வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு நீக்க பாஜக கோரிக்கை

X
Tenkasi King 24x7 |27 Dec 2025 10:32 AM ISTவாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு நீக்க பாஜக கோரிக்கை
எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள்! ஆராய்ந்து நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ.க. மனு பாரதிய ஜனதா கட்சி தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தென்காசி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான கமல் கிஷோரை நேரில் சந்தித்து, 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான சாத்தியமான இரட்டை பதிவுகள் குறித்து மனு வழங்கினார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி (220) தொடர்பான வரைவுச் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட தொடக்க நிலை தரவு ஆய்வின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான பதிவுகள் சாத்தியமான இரட்டைப் பதிவுகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலின் துல்லியம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டுமெனில், இவ்வகை பதிவுகள் தேர்தல் நிர்வாகத்தால் முறையாகச் சரிபார்க்கப்பட்டு திருத்தப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடையாளம் காணப்பட்ட 7,481 சாத்தியமான இரட்டைப் பதிவுகளின் முழுப் பட்டியலை உள்ளடக்கிய இரண்டு தரவு கோப்புகள் கொண்ட யுஎஸ்பி டிரைவ் ஒன்றை ஆனந்தன் அய்யாசாமி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். இப்பட்டியல் பல்வேறு பொருத்த அளவுகோள்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது பேசிய ஆனந்தன் அய்யாசாமி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சுத்தமான, வெளிப்படையான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே இந்த கோரிக்கையின் பிரதான நோக்கம் என தெரிவித்தார். இவ் விவகாரத்தை உரிய முறையில் ஆய்வு செய்து தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், தேர்தல் நிர்வாகத்திற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், தேர்தல் செயல்முறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த விவகாரம் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் தர்மர் அவர்கள் தென்காசி நகர் தலைவர் கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் உடனிருந்தனர்.
Next Story
