பெரம்பலூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா
Perambalur King 24x7 |27 Dec 2025 11:07 PM ISTஏகாதேசியின் பெருவிழாவில் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது
பெரம்பலூர் பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில், இன்று (டிச.27) வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் 10 நிகழ்வில் 8-ஆம் நாள் பெருமாள் பாண்டியன் கொண்டை கிளிமாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர். மேலும் பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.
Next Story


