மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கெட்ற மாவட்ட ஆட்சியர்.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 572 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் ரூ.90,500/- மதிப்பில் 22 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஒரு பயனாளிக்கு இயற்கை மரண வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியர் சு.சுந்தரராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


