கிளை நூலக வாசக வட்டத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம்

X
Komarapalayam King 24x7 |29 Dec 2025 7:18 PM ISTகுமாரபாளையம் கிளை நூலக வாசக வட்டத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் கிளை நூலக வாசக வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெறும், நேற்று குமாரபாளையம் சத்யாபுரி நகரில் விடியல் பிரகாஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இம் மாதம் மாணவரின் திறன் என்னும் தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.சிற்பி சண்முகசுந்தரம் வரவேற்றார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் மாணவரின் திறன் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினர்கள். எழுத்தாளர் கேசவமூர்த்தி ராஜகோபாலன், மாணவ மாணவர்களுக்கு சிறுகதைகள் எழுதுவதை பற்றி கூறினார். இதில் தீனா, சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
