திண்டுக்கல்லில் ஜவுளி கடையில் பணம், துணி கொள்ளை

அடித்த வழக்கில் மேலும் இருவர் கைது, ரூ.15 ஆயிரம் பணம், துணிகள் பறிமுதல்*
திண்டுக்கல், முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையின் மேற்கூறையை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து ரூ.45 பணம், 20 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் ஆகியவற்றை திருடி சென்றது தொடர்பாக நிலக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி(30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் முகமதுஅலி, விசுவாசம் சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த அபினேஷ்(22), அருண்பாண்டி(24) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் பணம், துணிகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Next Story