துவரங்குறிச்சி அருகே லாட்டரி விற்பனை செய்தவர் கைது .

X
Tiruchirappalli (East) King 24x7 |4 Jan 2026 12:22 PM ISTதுவரங்குறிச்சி அருகே லாட்டரி விற்பனை செய்தவர் கைது .
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக துவரங்குறிச்சி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் தனேஷ் தலைமையிலான காவலர்கள் துவரங்குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது துவரங்குறிச்சி மோரணி மலை அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த வல்லான் மகன் பாண்டியன் 39 என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Next Story
