வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசனில் மாபெரும் பொங்கல் விழா கொண்டாட்டம்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் A.S எழிலரசி பள்ளிக் கல்வித்துறை அலுவலர் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன், முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் மாபெரும் பொங்கல் விழாவானது கல்லூரியின் செயலாளர் இரா.முத்துவேல்,அவர்களின் தலைமையில், கல்லூரிகளின் முதல்வர்களான முனைவர். எஸ்.பி.விஜய்குமார், முனைவர் மா.மருதை, முனைவர் ஆர்.மணி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். ஆ.ஸ்டெல்லா பேபி மற்றும் துறைகள் சார்ந்த புல முதன்மையர்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்விப்புலம் வாரியாக, தனித்தனியே கரும்பு, மஞ்சள், வண்ண தோரணங்களோடு, புதுப்பொங்கல் பானைகள் கொண்டு சிறப்பாக பொங்கல் வைத்தும், முளைப்பாரி கையில் ஏந்தி வலம் வந்து வண்ண கோலத்தின் நடுவே வைத்தும் விழாவானது கொண்டாடப்பட்டது.முன்னதாக மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளான தனிநபர் மற்றும் குழு நடனம், கிராமிய கலைகளான பறை இசை, கும்மி மற்றும் சிலம்பாட்டம் போன்றவையும், தமிழரின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான கபடி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி மற்றும் முறுக்கு கடித்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் சிறப்பாக விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று பொங்கல் விழாவினைச் சிறப்பித்தனர்.
