ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்...

X
Rasipuram King 24x7 |18 Jan 2026 8:05 PM ISTராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள், மற்றும் பண்டிகை காலங்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெறும். அதன்படி தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தை அமாவாசையை முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story
