தனியார் பள்ளி மாணவன் தற்கொலை

தனியார் பள்ளி மாணவன் தற்கொலை
X
குமாரபாளையத்தில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் பூலக்காடு பகுதியில் வசிப்பவர் தீபேஷ், 17. குமாரபாளையம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் படிப்பதற்கு சிரமப்பட்டு, மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணியளவில் அவரது அறையில் தூங்க சென்று உள்ளார். நேற்று காலை கதவை திறக்காமல் இருந்ததால், பெற்றார் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, மின் விசிறியில் வேட்டியில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியுள்ளார். இவரை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story